துடியலூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது!

ஜே.அருண்ஹென்றிக்ஸ்,
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் துடியலூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கவுண்டம்பாளையம் (எஸ்.கே.ஆர். நகர் பார்க்) பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சாவை வைத்திருந்த கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மணி மகன் வினோத் குமார் (எ) வினோத் (30) என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 1,500 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் ரூ.65,000/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.