புதுமனை புகுவிழா காணாமல் சரிந்து விழுந்த மாடி வீடு!

புதுமனை புகுவிழா காணாமல் சரிந்து விழுந்த மாடி வீடு!

 ம.முருகன்,

 புதுச்சேரியில், புதுமனை புகுவிழா காண தயாராக இருந்த மாடி வீடு சரிந்து விழுந்தது. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுதனர்.  

 புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே இரண்டு மாடி கட்டிடம் ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டது.

 அந்த வீட்டுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி கிரகபிரவேசம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

 அதனை அடுத்து அந்த வீடு திடீரென ஆட்டம் கண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் உரிமையாளரிடம் போய் சொன்ன போது வீட்டில் உரிமையாளர்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வீடு தரைமட்டமாகியது. இதை பார்த்து வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுதனர்.

 தண்ணீர் கால்வாய் அருகே மண் வளத்தை சோதனை செய்யாமல் வீடு கட்டியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.