தங்க கோவில் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள்!சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேச்சு!

தங்க கோவில் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள்!சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேச்சு!

ஜி.கே.சேகரன்,

தங்க கோவில் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருவதாக அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேச்சு.

  வேலூர்மாவட்டம், அரியூரில் உள்ள தங்க கோவில் நாராயணி பீடத்தில் சக்தியம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு 10008 வஸ்திர தானம் வழங்கும் விழா நடைபெற்றது. தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்ற இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பக்தர் சைமன் உள்ளிட்டோரும் ஆயிரக்கணக்கான திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியி சிறப்பு அழைப்பாளராக அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்துகொண்டார். அப்போது ஏழை மக்களுக்கு துணிகளை வழங்கி விழாவில் பேசினார். உலக அளவில் போற்ற தக்க ஒன்றாக இந்த நாராயணி தங்க கோவில் விளங்குகிறது மேலும் இங்கு மனித நேய சேவைகள் பல நடக்கிறது.

 குறிப்பாக ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஏழை மக்களுக்கு நாராயணி மருத்துவமனையின் சார்பில் மருத்துவ உதவிகள் செய்யப்படுகிறது. இவைகளை எல்லாம் கடந்து சுற்றுசூழலை பாதுகாக்கவும் இயற்கை போற்றும் வகையில் இந்த நாராயணி பீடம் சார்பில் லட்சக்கணக்கில் மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனர் இவர்களின் சேவை பாராட்டுக்குரியது என பேசினார்.