ராகுலின் யாத்திரையை அசாம் மோரிகான் மாவட்ட ஆட்சியர் தடுத்தார்!

டி.இ.முகமது,
இந்திய ஒற்றுமை மற்றும் நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வாகனம் நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்துடைந்துள்ளது.
பின்னர் அசாமில் நியாய யாத்திரை புறப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
குறிப்பாக அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் ராகுல் காந்தி தெருமுனைப் பிரச்சாரங்களுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அவரை அந்த மாவட்டத்துக்கு வர வேண்டாம் என்று மாவட்ட காவல் ஆணையார் அறிவுறுத்தியதுடன், ராகுல் வருவதால் சில விஷமிகள் மாவட்ட அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடும் என அவர் சொல்லியிருக்கிறார்.
"உளவுத் துறை தகவலின்படி, ஒரே நாளில் ராமர் கோயில் கும்பாபிஷேகம், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற இரு நிகழ்வுகள் நடைபெறுவதை ஒட்டி சில சமூக விரோதிகள் பரபரப்பான சூழலைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடலாம். இதனால் மாவட்ட அமைதிக்கும் குந்தகம் ஏற்படலாம். அதனால் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
சரி பராவாயில்லை, என அங்குள்ள ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் நேற்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அந்தக் கோயிலுக்குச் செல்ல ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, "சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி என்னைத் தடுத்துள்ளனர். வைஷ்ணவ மத புனிதர் ஸ்ரீமந்த சங்கரதேவ பிறப்பிடத்துக்கு என்னைத் தவிர வேறு யார் சென்றாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வராது என்பதுபோல் அரசு நடந்துள்ளது. கவுரவ் கோகோய் சென்றால் பிரச்சினை இல்லை. ஆனால், நான் சென்றால் பிரச்சினையாகுமாம்.
நான் இன்னொரு முறை வாய்ப்பு கிட்டும்போது படத்ராவா கோயிலுக்குச் செல்வேன். அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே சங்கரதேவ் வகுத்த பாதையை பின்பற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என்று சொன்னார்.