வாகன சோதனையில் சிக்கிய 600 புடவைகள் தையல் இயந்திரங்கள்!

வாகன சோதனையில் சிக்கிய 600 புடவைகள் தையல் இயந்திரங்கள்!

க.பாலகுரு,  

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 600-க்கும் மேற்பட்ட புடவைகள் 16 தையல் இயந்திரங்கள் பறிமுதல் .

 திருவாரூர் மார்ச் 23-திருவாரூர் மாங்குடி அருகே பாண்டவைஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருத்துறைப் பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட  16  தையல் எந்திரம் ,  நான்கு மூட்டைகளில் 600க்கும் மேற்பட்ட புடவைகள் இருந்தன உடனடியாக பறக்கும் படை அலுவலர் காமராஜ் ,சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அம்பிகாபதி , காவலர் ஜெயசீலன்  சோதனையின் போது பிடித்தனர்.

ஆவணம் இன்றிபிடிபட்ட பொருட்களை திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர் ,

இதனை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் தடுப்பு பொருட்கள் ஒருங்கிணைப்பு அலுவலர் பாரதி பார்வையிட்டு ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட பொருட்களை திருவாரூர் மாவட்ட சார்நிலை கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர் .