நாகை தொகுதியை சூடேற்றிய அதிமுக!

க.பாலகுரு,
நாகை தொகுதி அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய கழக நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக பணியாற்ற வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தலைமைக் கழகத்தால் நாகை நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுர்ஜித் சங்கரின் அறிமுக கூட்டம் திருவாரூர் நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ரா.காமராஜ் மற்றும் ஓ .எஸ் . மணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் திமுகவின் பித்தலாட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் வேட்பாளர் சுர்ஜித் சங்கரை வெற்றி பெறச் செய்ய நம் கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் சிவா ராஜமாணிக்கம், கோபால், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.