6 கோடி அளவுக்கு மணல் கொள்ளை! உளுந்துவடை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகள்!

ம.பா.கெஜராஜ்,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அழியாநிலை கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் ரூ.6 கோடிக்கு மேலாக மணல் கொள்ளை நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை கையில எடுத்த எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான துரை குணா மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் கொடுதுள்ளார்.
இது குறித்து துரை குணா கூறுகையில்..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அழியாநிலை கிராமம் புல எண் 39/1 -னில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்து வரும் வெள்ளாற்றில் கடந்த சில வாரங்களில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
அதையறிந்த நான் அந்த இடத்துக்கு சென்றேன். அங்கு அழியாநிலை கிராமம் அறந்தாங்கி - புதுக்கோட்டை மாநில நெடுஞ்சாலையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் அந்த வெள்ளாறு. நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதியையெல்லாம் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்பு செய்து வெளி ஆட்கள் உள்ளே வராதபடி வேலி அமைத்திருக்கிறார்கள்.
அதில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பு இருக்கிறது. தென்னந்தோப்பை மையமாக வைத்து தான் இந்த மணல் கொள்ளை நடைபெறுகிறது.
இந்த இடத்தை சுற்றி சுமார் 100 கோடிக்கும் மிகாமல் மணல் இருக்கிறது. அதனால் தான் இந்த இடத்தை குறி வைத்துள்ளது அந்த மாஃபியா கும்பல்.
இரவு பகலாக இரண்டு ஹிட்டாச்சிகள் மூலம் சுமார் 20 அடிக்கு மிகாமல் பள்ளம் தோண்டி மணலை எடுத்து குவித்து வெளிச்சந்தையில் விக்கிறார்கள்.அதாவது பெரிய டிப்பர் லாரிகள் மூலம் டோக்கன் படி ஒரு யூனிட் 8000 முதல் தூரம் அதிகமாகும் பொழுது அல்லது வெளி மாவட்டங்களாக இருந்தால் யூனிட்டின் விலை மாறுபடும்?.
இப்படி, இரவு பகலாக அள்ளப்பட்ட மணலின் மதிப்பு சுமார் 6 கோடி இருக்கலாம்?. எங்களுடைய கணக்கு தவறாக இருந்தால் அவர்கள் அள்ளியது அதிகமாகத்தான் இருக்குமே தவிர குறைவாக இருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்?
மணல் கடத்தலை தடுப்பதற்கு அந்த பகுதி மக்கள் போலீஸின் எண் 100-க்கு போன் பண்ணினால்.,எந்த போலீசும் வரவில்லை.
அதே போல் வெள்ளாற்றிலிருந்து மணலை அள்ளிக்கொண்டு ரோட்டுக்கு வந்தால் 300 மீட்டரில் தான் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகம் உள்ளது.
மணல் கொள்ளை நடக்கும் வெள்ளாற்றிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் தான் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம்,காவல் நிலையம்,காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன.
ஆனால் டோக்கன் போட்டு மணல் அள்ளி வெளிச்சந்தைக்கு போவது எங்களுக்கு தெரியாது? என கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
யார்? சட்ட விரோதமாக மணல் அள்ளியது? டோக்கன் போட்டு மணல் அள்ளும் அளவிற்கு ஒரு குவாரி செயல்பட்டு கொண்டிருக்கிறது. உங்களுக்கு தகவல் தெரியாதா?என அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது. ''நானும் கிராம நிர்வாக அலுவலரும் சம்பவ இடத்திற்கு போனோம்'' எங்களை கண்டதும் எல்லோரும் ஹிட்டாச்சி டிப்பரை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். போலீசுக்கு புகார் கொடுத்திருக்கிறோம். மணல் அள்ளிய சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று தெரிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்போம் என்கிறா£கள்.
பார்கலாம், அப்படி உரிய நடவடிக்கை எடுக்கவிலையெனில், மணல் கொள்ளையர்களையும் அவர்களுக்கு துணையாக செயல்படுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தவும் தயாராகி வருகிறோம் என்று சொன்னார்.
குறிப்பு:- இங்கு பல உளவுத்துறைகள் இருக்கின்ற பொழுது மணல் கொள்ளை எப்படி சாத்தியப்படும் என்று விசாரித்த போது, அவர்கள் உளுந்துவடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பகுதிவாசிகள் சொல்கிறார்கள்.