தாமிரபரணி ஆற்றை நீதிபதிகள் ஆய்வு செய்வது பற்றி எனக்கு தெரியாது! நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

தாமிரபரணி ஆற்றை நீதிபதிகள் ஆய்வு செய்வது பற்றி எனக்கு தெரியாது! நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

G.K.Sekaran,

தமிழகத்தில் நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் கிடையாது - எடப்பாடி பழனிசாமி தவறான இடங்களை தடுப்பணைகளுக்கு தேர்வு செய்துவிட்டார் சட்டமன்றத்தில் கேட்கட்டும் நான் பதிலளிக்க தயார், தாமிரபரணி ஆற்றை நீதிபதிகள் ஆய்வு செய்வது பற்றி எனக்கு தெரியாதுநீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

  வேலூர்மாவட்டம், அனைக்கட்டு கிராமத்தில் புதியதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோட்டம் அலுவலகத்தை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.

 அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவிரி ஆற்றின் குறுக்கே  ஆதனூர்-குமாரமங்கலம்  தடுப்பணை ,புகலூர் கதவணை கிடப்பில் போட்டது குறித்து கொஞ்சம் கூட ஆதாரமில்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்

  அவரால் துவங்கப்பட்டது ஆனால் சரியான ஆய்வு செய்யாமல் இடத்தை தேர்வு செய்துவிட்டார்.  அதற்கு திட்டம் செயல்படுத்த மறு ஆய்வு செய்யவே பாதி பணம் போய்விட்டது.  இதனை அவர் சட்டமன்றத்தில் பேசட்டும் சரியான பதில் அளிக்கிறேன்.

 நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமில்லை. மேட்டூர் அணையை தூர் எல்லாம் வார முடியாது யாரும் அங்கு மணல் எடுக்கமாட்டார்கள். தாமரபரணி ஆற்றை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்வது குறித்து எனக்கு தெரியாது என்று சொன்னார்.