எஸ்.பி.உத்தரவின் டீமிடம் சிக்கிய கஞ்சா டீம்!

கு.அசோக்,
ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் 3 பேர் கைது
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருருகிறார்.
இந்நிலையில், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவிலிருந்து வேலூர் நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 80,000/- ரூபாய் மதிப்புடைய 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.
எனவே கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராமராஜன் ரசூல்லா, வேலன் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.