கண்டிப்பாக சாலை போடமாட்டார்கள் நம்புங்கள்!

ஜி.கே.சேகரன்,
தார் சாலை பழுதடைந்து குண்டும்,குழியுமாக உள்ளதால் விளைப் பொருட்களை எடுத்து செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட நத்தம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இவ்வழியாக சொக்கனாம்பட்டி,நத்தம், சுந்தரம்பள்ளி, ஆகிய காக்கங்கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் அவ்வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
இதே வழியில் தான்விவசாயிகள் நிலத்தில் விளையக்கூடிய கத்திரிக்காய்,முள்ளங்கி தக்காளி, கீரை உள்ளிட்ட விளைப்பொருட்களை தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.
ஆனால் அப்போது தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் இம்மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் கீழே விழுந்தது எழுந்து செல்லும் அவலநிலை உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் தார்சாலை வேண்டும் என புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கண்டிப்பாக செய்யமாட்டார்கள்....நம்புங்கள்.