அமரன் திரைப்படத்துக்கு திரண்ட இராணுவ வீரர் குடும்பங்கள்!

கு.அசோக்,
வேலூரில் அமரன் திரைப்படத்தை காண ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 250க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு, திரையங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் "அமரன்" திரைபடத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வெளியிட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த படத்தை வேலூரை அடுத்துள்ள "ராணுவப்பேட்டை" கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திரையரங்கில் பார்த்தனர்.
அந்த கிராமத்தைப் பொருத்தவரை குடும்பத்தில் ஒரு நபராவது ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு இலவசமாக ராஜ் கமல் பிலிம்ஸ் அமரன் படத்தை திரையிட்டது.
அப்போது இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்த அம்மக்கள் மரியாதை செலுத்தினார்.