வாணியம்பாடியில் அரசு கொடுக்கும் மருத்துவத்தை தடுக்கும் நபர்! ஏழை பெண் இறப்பால் உறவினர்கள் முற்றுகை!

வாணியம்பாடியில் அரசு கொடுக்கும் மருத்துவத்தை தடுக்கும் நபர்! ஏழை பெண் இறப்பால் உறவினர்கள் முற்றுகை!

ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு மருத்துவர்கள் செவிலியர்கள் முறையான சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஃபிக் அஹமத். இவர் கூலித்தொழில் செய்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் முடங்கிவிட்டார்.

 இந்நிலையில் அவரை கண்காணித்துக் கொள்ள அவரது மனைவி ஆயிஷா ஜம்ரூத் (45) என்பவர் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

 இவருக்கு  கடந்த 7 ஆம் தேதி  திடீரென  தலைவலி காய்ச்சல்  காரணமாக அவதிப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 அவர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 இதனை அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

 அப்போது அவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால்முயிரிழப்பு ஏற்பட்டது.

 முறையான சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை எடுக்க மாட்டோம் என கூறி¢ மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அதை  தொடர்ந்து தகவல் அறிந்து  டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் தலைமை மருத்து அலுவலர் சிவ.சுப்ரமணியம்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

 ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது புகார் அளிக்கவும், அதன் மீது  விசாரணை மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கிச் சென்றனர்

இது குறித்து உயிரிழந்த ஆயிஷா ஜம்ரூத்  தாயார் அளித்துள்ள பேட்டியில்

மூன்று நாட்களாக மருத்துவர்கள் செவிலியர்கள் முறையான மருத்துவம் அளிக்கவில்லை எனவும் , இதயம் பரிசோதனை செய்யப்பட்டு என்ன நிலைமையில் உள்ளார் என்று உறவினர்கள் கேட்டால் அலட்சியமாகவும் தகாத வார்த்தைகளால் பேசினார்கள்.

 ஏழை மக்களாகிய நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அரசு மருத்துவமனையை நாடி வந்தால் இது போன்று அலட்சியமாக செயல்படுவதா?

 ஏழைகள் உயிருக்கு பாதுகாப்பு கிடையாதா? இதுபோன்ற நிலைமை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

குறிப்பு:- வாணியம்பாடி அரசு மருத்துவமனையைப் பொறுத்தமட்டில் அரசியல்வாதியின் மகன் ஒருவர் முழு நடவடிக்கையையும் தன்காட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார். அவர் தனியாக ஒரு மருத்துவமனை செட்டப்பை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்க வரும் ஏழைகளை தம்முடைய மருத்துவமனைக்கு வரவழைத்து பணம் பிடுங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

 மேற்படி அந்த ஏழை பெண் இறந்த பிரச்சனை சமயத்தில் அவரும் பணியில் இருந்துள்ளார். தன்னை மருத்துவ இணை இயக்குநர் ரேஞ்சுக்கு காட்டிக் கொள்ளும் இவர்,  ஏழை மக்களுக்கு அரசாங்கம் அளிக்கும் இலவச மருத்துவத்தை தடுப்பதாக சொல்லப்படுகிறது.

 இது குறித்து அமைச்சர் மா.சு அவர்கள் விசாரித்தால் ஏழைகள் நலம் காக்கப்படும்.