பொழுதுபோக்குக்கு ரூபாய் 28.45 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரிகளில் ரூபாய் 28.45 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் சுற்றுலா இடமாக மாற்றும் பணிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தா£ ¢- இதனை சுற்றுலா தலமாக மாற்றி படகு சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் செய்யப்படும் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் தாராபடவேடு பகுதியில் உள்ள தாராபடவேடு ஏரி ஆகிய ஏரிகள் ரூபாய் 28 புள்ளி 45 கோடி மதிப்பில் படகு சவாரி நடைபாதை உள்ளிட்ட சுற்றுலா தளமாக மாற்ற தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார் தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
பின்னர் தமிழகநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் ஜி 20 மாநாட்டிற்கு அழைப்பிதழில் இந்திய பிரதமர் என குறிப்பிடுவதற்கு பதில் பாரத பிரதமர் என குறிப்பிட்டு இருப்பது அவர்களின் நிலைப்பாடு. கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு இரண்டு ஏரிகளும் இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் சுற்றுலா தலமாக மாற்ற ரூபாய் 28.45 கோடி ஒதுக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன் என்றார்.