எல்லை மீறிய உதயநிதி ரசிகர் மன்றத்தினர்! கையை பிசைந்த போலிசார்!

எல்லை மீறிய உதயநிதி ரசிகர் மன்றத்தினர்! கையை பிசைந்த போலிசார்!

 கு.அசோக்,

அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை எரித்து காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்.

 யார் உருவபொம்மை எரிக்க முயன்றாலும் அதை தடுக்க வேண்டிய போலிசார் பாவம் கையை பிச்ய்ந்துக் கொண்டு கம்மென்று வேடிக்கை பார்த்தனர்.

   சனாதானத்தை எதிர்ப்பதைவிட அதை டெங்கு கொசு, கொரோனா போல் ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதிக்கு தேசிய அளவில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்தரபிரதேசம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரஹம்சஆச்சார்யா அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி  அறிவித்தார். எக்ஸ்ட்ரா பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

  இதனை கண்டிக்கும் வகையில் வேலூர் மாவட்டம், சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உதய நிதி நற்பணி மன்ற ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் டீட்டா சரவணன் தலைமையில் ரசிகர் மன்றத்தினர் மற்றும் திமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர்   அயோத்தி சாமியாரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி தீ வைத்து கொளுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்னர்.

    லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாய் வந்த காட்பாடி காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.