செயல்படாத அதிகாரிகளை பட்டையை உரித்து நடவடிக்கை எடுப்பேன்! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
காவிரி தண்ணீர் குறித்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது காவிரி தண்ணீர் காக போராடிக் கொண்டிருக்கிறோம்- வேலூர் மாநகராட்சியில் சாலைகள் சரியில்லை தெருக்களும் சரியில்லை மாநகராட்சி அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி வட்டாட்சியர் அலுவலக 25ஆம் ஆண்டு விழாவில் பேச்சு
வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் பின்னர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காட்பாடி தனி வட்டமாக துவங்கப்பட்டு 25 ஆம் ஆண்டு விழா வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமா£,¢ அமுலு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் வேலூர் மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்ட திரளானோர்பங்கேற்றனார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பெரிய போடி நத்தம் பகுதியில் யானை மிதித்து உயிர் இருந்த வசந்தா என்ற பெண்ணின் குடும்பத்திற்கு ரூபாய் நாலரை லட்சத்திற்கான காசோலையும் அவர்கள் குடும்பத்திடம் வழங்கினார்,
பின்னர் விழாவில் தமிழை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் பல்வேறு அணைகளை தற்போது கட்டி வருகிறோம் இதற்கு முன்பும் தமிழ்நாடு முழுவதும் நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பல அணைகளை கட்டி உள்ளேன்.
பல்வேறு பெரிய கட்டிடங்களை திறந்து உள்ளோம் அந்த வகையில் இந்த காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் 25ஆம் ஆண்டு துவக்க விழாவில் நான் பங்கேற்பதில் அதுவும் அதிகாரத்துடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இன்னும் 25 ஆண்டு காலம் கழித்து ஐம்பதாம் ஆண்டு விழாவிலும் நான் பங்கேற்பேன்.
வேலூர் மாநகராட்சி பொருத்தவரை அதிகாரிகள் சரிவர செயல்படுவதில்லை கால்வாய்கள் சரியாக பராமரிப்பது இல்லை சாலைகளும் சரியாக இல்லை இது குறித்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை அவர்களை பட்டையை உரித்து நடவடிக்கை எடுப்பேன்.
மேலும் காட்பாடி பகுதிக்கு காவிரியில் இருந்து பாலாறு கழிவு நீரால் மாச பட்டதால் காவிரி நீரை கொடுத்ததும் நான் தான் காவிரி நீரை பெற தொடர்ந்து தமிழக அரசு போராடி வருகிறது நாளை உச்ச நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது அது என்ன ஆகும் என தெரியவில்லை இருப்பினும் தொடர்ந்து காவிரி நீருக்காக போராடி வருகிறோம் என்று பேசினார்.