வாழ்வாதாரம் போச்சும்மா...ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு!

கு.அசோக்,
பேருந்து நிலையத்தை மாற்றியதால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படைகிறது. அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டுமென வியாபாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் மற்றும் திமிரி வியாபாரிகளும், பொதுமக்கள் சார்பில் ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில், திமிரியில் பல ஆண்டுகளாக எதிர் பார்த்து இருந்த புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இதற்கிடையே, திமிரி நேரு பஜார், மார்க்கெட் சாலை, காவனூர் சாலை, ஆரணி சாலை மற்றும் பழைய பஜார், நம்பரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், தள்ளுவண்டி, சாலையோர கடை மூலமாக பொருட்களை விற்பனை செய்து வருகின்றோம்.
ஆனால் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், நேரு பஜாரில் எந்தவொரு பேருந்துகளும் நின்று செல்வதில்லை.
இதனால் பஜார் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மேலும் வியாபாரம் பெருமளவில் குறைந்து விட்டதால் திமிரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பேருந்து நிலையத்தில் மாணவர்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் சேர்க்கையும் வரும் கல்வியாண்டில் குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தினால் வியாபாரிகளுக்கு வாழ்வதாரம் பாதித்துக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே திமிரி நேரு பஜாரில் மீண்டும் அரசு பேருந்துகள் நின்றுச்செல்ல வேண்டும் " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.