சிட்டிங் எம்பி யான பொன்முடியின் மகனுக்கு மீண்டும் சீட்டு கொடுக்க உபி..க்கள் எதிர்ப்பு!

சிட்டிங் எம்பி யான பொன்முடியின் மகனுக்கு மீண்டும் சீட்டு கொடுக்க உபி..க்கள் எதிர்ப்பு!

உ.சசிகுமார்,

   கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் சிட்டிங் எம்பியாக கவுதம சிகாமணி இருக்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம சிகாமணி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட ஆசைபடுகிறார். அதே போல் மகனுக்கு மீண்டும் சீட்டு பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் பொன்முடியும் முயன்று வருகிறார்.

 மானால் அவர் மீது அந்த தொகுதிக்குட்பட்ட உடன்பிறப்புகள் செம கோபத்தில் உள்ளனராம்.

   இந்த தொகுதியானது  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

  ஆக இரண்டு மாவட்ட உபிக்களை கூல்படுத்தினால் மட்டுமே சீட்டு என்றாலும் கூட மக்கள் சிட்டிங் எம்பி மீது அதிருப்தியில் உள்ளனர். 

  கவுதம சிகாமணி எம்.பி. கடந்த நான்கரை ஆண்டுகளில் கட்சியினரைக் கண்டு கொள்ளாமலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாகவும் குற்றம்சாட்டுவதுடன், கின்றனர்.    எனவே கவுதம சிகாமணிக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

 மாவட்டத்தில் உள்ள உடன் பிறப்புகளுடன் கவுதம சிகாமணி சவகாசமே வைத்துக்கொள்ளவில்லையாம்.

 ஊழல் வழக்கால் பிரச்சினை கவுதமசிகாமணி மீதான ஊழல் புகார்களை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யக் கூடும் என்பதால், அவருக்கு சீட் வழங்க வேண்டாம் என்று  எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

 இருந்தாலும் கூட கவுதம சிகாமணி எம்.பி. தொகுதிக்குள் செய்த சிலபல பணிகளை காட்டி தலைமையிடம் சீட்டு பெறுவாராம்.