பெரிய போலிசுன்னு நினைப்பு! அடி விட்டு கேட்ட பெண் தட்டி தூக்கப்பட்டார்!

பெரிய போலிசுன்னு நினைப்பு! அடி விட்டு  கேட்ட பெண் தட்டி தூக்கப்பட்டார்!

ம.பா.கெஜராஜ்,

பெரிய சமூக சேவகி என்கிற நினைப்பில் மாணவர்களை தட்டிகேட்ட பெண்மணியை போலிசார் கொத்தாக அள்ளிச்சென்று வழக்குப்பதிந்தனர்.

 சென்னை போரூரிலிருந்து, குன்றத்தூர் அரசு பேருந்தில் மாணவர்கள் அபாயகரமாக தொங்கிக்கொண்டு பயணித்தார்கள். அப்போதை அதை பின்னாள் காரில் வந்த ரஞ்சனா நாச்சியார் என்கிற பெண் பார்த்து கொதித்துப்போனார்.

 உடனே பஸ்ஸை ஓவர் டேக் செய்து மடக்கி நிறுத்தி, ஓட்டுநரை சகட்டுமேனிக்கு திட்டி நீங்க எப்படி இவ்விதமாக பேருந்தை இயக்கலாம் என்று கத்தினார்.'

 அப்படியே படிகட்டு பக்கம் வந்த அம்மணி, அதில் தொங்கிக்கொண்டிருந்த மாணவர்களை பளார் விட்டதுடன், நாயே என்று சவுண்டுவிட்டார். அதே பாணியில் நடத்துனரையும் பார்த்து வாசைகளை வீசினார். இடையே ஒரு மாணவன் அக்கா நீங்க யார் அடிக்கறதுக்கு என்று கேட்க அதற்கு அம்மணியோ நான் போலிஸ்டா நாயே என்று மீண்டும் மீண்டும் பளார் விட்டு அவர்களை இழுத்து கீழே இறக்கி விரட்டினார்.

 இந்த காட்சிகள் பரவலானதும் அம்மணிக்கு கண்டனங்களும், பாராட்டுகளும் கொட்டிகுவிந்தன. டேய் இந்தம்மா போலிஸ் இல்லை, போலிஸ் போய் இப்படி கடமையாற்றுவார்களா என்று பாராட்டும், பசங்களை அடிக்கவும் நடத்துனரை திட்டவும் இவுங்க யார் என்று வசையும் வந்து விழுந்தன.

 இந்நிலையில் பேருந்து நடத்துனர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ரஞ்சனா நாச்சியாரை போலிசார் அவரது பங்களாவுக்கே சென்று அவரை அமுக்கிவந்து வழக்கு போட்டனர். என் பெட்ரூமை ஆண் போலிஸ் வந்து எப்படி தட்டலாம், வாரண்ட் இருக்கா, முதல் தகவல் அறிக்கையின் நகல் எங்கே, நான் ஸ்டேஷனுக்கு என்னுடைய காரில் தான் வருவேன் என்று ரவுசு விட்டார். ஆனாலும் போலிசார் அவரை லபக்கிக்கொண்டு சென்றார்கள்.

   சரி, யார் தான் இந்த ரவுசு அம்மணி என்று பார்த்தால் அவர் பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளராக உள்ளாராம். துணை நடிகையாகவும் இருந்துள்ளார்.

  இது போதாதா? வழக்கு போட?

தற்போது அந்த அம்மணி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.