எண்ணெய் செக்கு இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி இறந்தார்!

எண்ணெய் செக்கு இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி இறந்தார்!

கு.அசோக்,

சோளிங்கரில் எண்ணெய் மரச் செக்கு இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மேற்கு போர்டின்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (42), ஆட்டோடிரைவர். இவர் பகுதி நேரமாக எண்ணெய் மரச்செக்கில் கூலி வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 16 வயதில் மகள், 13 வயதில் மகன் உள்ளனர்.

   இன்று காலை எண்ணெய் மரச்செக்கிற்கு சென்ற சுரேஷ், வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறிய சுரேஷ் தவறிவிழுந்து வேகமாக இயங்கிக்கொண்டிருந்த மரச் செக்கில் சிக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக் டர் முருகானந்தம், எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுரேஷை மீட்டு சோளிங்கர் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.