வட்டாட்சியர் அலுவலக வாயிலில் ஆவேசமாக பேசிய பெண்! 290 ஏக்கர் பட்டா முறைகேடு குற்றச்சாட்டை முதல்வர் பார்வைக்கு முன் வைத்தார்!

அ.கோகுல் சந்தோஷ்,

 290 ஏக்கர் நிலத்தை செல்வந்தர்களுக்கு பட்டா போட்டு கொடுத்த திருப்பூர் அலுவலர்கள் சிலரை கண்டித்து பெண் ஒருவர் வீடியோ மூலம் முதல்வருக்கு புகார் அளித்துள்ளார்.

 திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நின்று ஒரு பெண் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

   முதல்வரின் பார்வைக்காக என்று துவங்கும் அவர், நெருப்பெரிச்சல் என்கின்ற பகுதியில் மற்றும் 5 வார்டுகளில் 290 ஏக்கர் தனி வட்டாட்சியர் அவர்களால் பட்டா வழங்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து விட்டார்கள்.

   சாமானிய மனிதர்களுக்கு மூன்று சென்ட் பட்டாவுக்கு கொடுங்கண்ணா அதற்கு இல்லை என்கிறார்கள்.

ஆனால் அதிகார பலம், பண பலம் உள்ளவர்களுக்கு கொடுக்கிறார்கள். நெருப்பெரிச்சல் கிராம உதவியாளருக்கு எத்தனை கோடி சொத்து இருக்கிறது என்று ஆய்வு செய்யுங்கள். சார்பதிவாளர் அலுவலகத்தை ஆய்வு செய்யுங்கள்.

 பல கோடி அதிபதியாக இருப்பவர்களுக்கு இந்த தனி வட்டாட்சியரால் போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.  அந்த பட்டாக்களை ரத்து செய்யுங்கள். அதில் எல்லாம் வணிக வளாகங்கள், கடைகள் கட்டி வாடகை விட்டு இருக்கிறார்கள். மாநகராட்சியில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

  தனி வட்டாட்சியரால் ஆதிதிராவிடர்களுக்காக கொடுக்கப்பட்ட பட்டா நிலத்தை அதே தனி வட்டாட்சியர் ரத்து செய்கிறார். சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதுகிறார் இதை பத்திரம் செய்யலாம் என்று. அதன் அடிப்படையில் சார் பதிவாளரும் பத்திரம் செய்கிறார்.

ஏழை எளியவர்களுக்கு இடம் இல்லை.நான் குடி இருக்கிற வீட்டுக்கே பட்டா இல்லை என்கிறார்கள்.

ஆகவே முதலமைச்சர் அய்யா அவர்கள், தனி வட்டாட்சியரால் கொடுக்கப்பட்டது, வருவாய் துறை, கோட்டாட்சியர் இவுங்க யார்யாருக்கெல்லாம் பட்டா கொடுத்திருக்கிறார்கள் என்று நீங்க ஆய்வு செய்யுங்கள்.  

இரண்டு முறை சிஐடி வந்து என்ன விசாரணை நடத்தி இருக்கிறா£.¢ ஆனால் என்ன ரிப்போர்ட் கொடுத்தார் என்று தெரியவில்லை.

பொய் பொய்யா பேசுறாங்க நீங்க நம்பாதீங்க.அதிகார பலத்துல உள்ளவர்களுக்கு தான் பட்டா போட்டு கொடுக்குறாங்க.

ஒரு சர்வே நெம்பர் அரசு நிலத்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக பல சப் டிவிஷன்களாக பிரிக்கிறார்கள், பல சர்வே எண்கள் அளிக்கிறார்கள்.

தனி வட்டாட்சியர் அவர்களால் எவ்வளவு பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை சார் ஆட்சியர் கோட்டாட்சியர் வருவாய்த்துறையை ஆய்வு செய்யுங்கள் 27/6/2024 காலையிலிருந்து மனு கொடுத்து காத்திருக்கிறேன். சோறு சாப்பிடல, எந்த மனுவுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. லஞ்ச பணம் கொடுத்தால் தான் உள்ளே அனுப்புகிறார்கள். அந்த அளவுக்கு தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதிகார பலம் கொடிகட்டி பறக்குது சாமானியபட்டவருக்கு நீதியில்லை என்று ஆவேசமாக  பேசிவிட்டு கிளம்பினார்.