ரவுடி என்கவுன்டர் ஸ்டார்ட் ஆகிவிட்டது!

ஆ.ஜோ,
புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். திருச்சி எம்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்த இவர் மீது 4 கொலை உள்ளிட்ட '64 க்கும் மேற்பட்ட மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது.
இந்நிலையில் வழக்கு ஒன்றுக்காக தேடப்பட்டு வந்த அவர் வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான போலீஸார் துரையைப் பிடிக்க சென்றனர். ஆனால், அங்கு மறைந்திருந்த துரை போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தன் கையில் இருந்த அரிவாளால் போலீஸாரை வெட்ட முயற்சித்துள்ளான்.
அதனால், தற்காப்புக்காக நடந்த துப்பாக்கிச்சூட்டில் துரை இறந்துவிட்டான்' என்று தெரிவித்துள்ளனர். முதல் என்கவுன்ட்டர் முயற்சியில் தப்பித்த துரை, தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இரண்டாவது முறையாக என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் சொல்கிறார்கள்.
திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் போலீஸாரை தாக்க முயன்றதால், என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்துள்ளார்.
' ரவுடிகளுடன் நட்பு மனநல ஆலோசகர் கைது
வேலூர் மத்திய சிறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மனநல ஆலோசகர் அருணாச்சலம், சிறைக்குள் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்ததால் போலீசார் கைது செய்து விசாரணை.