1092 செல்போன்கள் வேலூரில் மீட்பு! எஸ்.பி.தகவல்!!

1092 செல்போன்கள் வேலூரில் மீட்பு! எஸ்.பி.தகவல்!!

கு.அசோக்,

வேலூரில் களவு போன மற்றும் காணாமல் போன ரூ.34 லட்சம் மதிப்புள்ள 170 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார் 

 வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் செல் டிராக்டர் மூலம் காணாமல் போன மற்றும் களவு போன ரூ.34லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

   இதுவரையில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள 1092 செல்போன்கள் கடந்த ஆண்டு முதல் இதுவரையில் காணாமல் போனவைகள் களவு போனவைகளும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.