எல்லாவற்றிற்கும் சி.பி.ஐ விசாரணை கோருவது ஒரு பேஷனாக மாறிவிட்டது!அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,

 எல்லாவற்றிற்கும் சி.பி.ஐ விசாரணை கோருவது ஒரு பேஷனாக மாறிவிட்டது - காட்பாடியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

 வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள சேவூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடந்தது. இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் விழா நடந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார், அமுலு மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்

   பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கர்நாடகாவில் மூன்று அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தும் தண்ணீர் திறக்கவில்லை என்ற கேள்விக்கு, தண்ணீர் முழுவதும் நிரம்பினால் அவர்கள் திறந்துவிட்டுதான் ஆகவே வேண்டும் வேறு என்ன செய்ய முடியும்? எல்லா அணையும் கர்நாடகாவில் நிரம்ப போகிறது.

  தமிழகத்திற்கு தண்ணீர் வரும் புதியதாக 7 நீர் நிலைகள் சென்னையை சுற்றி உருவாக்கபடவுள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவு இதன் மூலம் நீர் சேமிக்கபடும். மதுரை கிராணைட் கல்குவாரி குறித்து இப்போது தான் விவரம் பெரிய அளவில் கிடைத்துள்ளது அதனை படித்து தான் பார்க்க வேண்டும்.

  ஏரி குளங்களில் மண் அள்ள அனுமதி அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் முடிவுடன் செய்தார்.¢ விவசாயிகளுக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம்.  மண் எடுப்பதை ஒழுங்காக எடுக்க வேண்டும் மதகை எடுக்க கூடாது அதனை முறைப்படுத்தி அதிகாரிகள் எங்கு எடுக்க வேண்டுமென சொல்ல வேண்டும்.

 பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டும் என்று கூறியுள்ளது. ஆந்திர முதல்வர் அதை கூட சொல்லாமல் இருப்பாரா? எல்லாவற்றிற்கும் சி.பி.ஐ விசாரணை என்று சொல்கிறார்கள். கள்ளச்சாராயம் சாவுக்கு சிபி.ஐ விசாரணை கேட்கிறார்கள் ஆம்ஸ்டராங்க் கொலைக்கும் கேட்கிறார்கள். இது ஒரு பேஷனாகிவிட்டது. எல்லா மாதத்திலும் எல்லா நாட்களிலும் எல்லா ஆட்சியிலும் கொலை நடந்துகொண்டு தான் இருக்கிறது, முன் விரோதம் காரணமாக கொலைகள் நடக்கிறது.

 ஆன் லைன் சூதாட்டத்தை சட்டம் போட்டு தடுக்கிறோம் ஆனால் திட்டம் போட்டு நடத்துகிறார்கள்.  அதிமுகவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பன்னீர் செல்வத்தையும் சசிகலாவையும் சேர்க்க வேண்டுமென பாஜக மிரட்டுவது என்பது வெளிநாட்டு செய்தி என்று கிண்டலாக சொன்னார்.

 அமைச்சர் ஆர்.காந்தி.

கடப்பேரி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தில் பங்கேற்ற கிராம பொதுமக்களுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மாபெரும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

 தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கடப்பேரி ஊராட்சி பகுதிகளில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தின் வெளியே மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பங்கேற்ற கிராம பொதுமக்களுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தலைமையேற்று மாபெரும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

  மேலும் முகாமில் எரிசக்தித்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, காவல் துறைமாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உள்ளிட்ட 15 துறைகளில் மூலம் பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு சென்று சிறப்பு முகாம் மூலமாக கிராம பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

 உடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.