நகராட்சி ஊழியர்களால் மோட்டார் பைக்குகள் எரிந்து சேதம்!

நகராட்சி ஊழியர்களால் மோட்டார் பைக்குகள் எரிந்து சேதம்!

ஜி.கே.சேகரன்,

 தெரு வீதியில் குப்பைக்கு தீ வைத்த நகராட்சி ஊழியர்கள்!  அருகே இருந்த வீட்டில் தீ பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் நாசம்.திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சின்னகடை வீதி காலியிடத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய நகராட்சி ஊழியர்கள் தீ வைத்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பக்தாவச்சலம் மகன் ரமேஷ் என்பவரது வீட்டில் திடீரென தீப்பற்றி வீட்டில் உள்ளே இருந்த சோபா செட் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் எரிந்தது.

 இதனை அறிந்த ரமேஷ் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின. நகராட்சி ஊழியர்கள் குப்பைக்கு வைத்த தீயில் வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.