பாஜக அண்ணாமலையை கண்டித்த வாலாஜா அசேன்!

பாஜக அண்ணாமலையை கண்டித்த வாலாஜா அசேன்!

கு.அசோக்,

  காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையை அவதூறாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மற்றும் சோங்கரில் ஆர்பாட்டம் நடத்தினர்.

 இராணிப்பேட்டை

இராணிப்பேட்டையில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில்நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா அசேன் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறாக பேசி வரும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து நடைபெற்ற இதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சோளிங்கர்

 அதே போல் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கண்டித்துலார்பாட்டம் நடைபெற்றது.

   சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் கோபால், மாவட்ட செயலாளர் அருண் கிழக்கு ஒன்றிய தலைவர் உதயகுமார் மற்றும் 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்களில் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.