419 மனுக்களை பெற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர்!

க.பாலகுரு,
திருவாரூர் ஜூலை,10- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 419 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு தலா ரூ.5824 மதிப்பில் ரூ.1,74,720 மதிப்பிலான மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
மேலும், 4 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நவீன செயற்கை கால் தலா ரூ.14500 வீதம் 5 நபர்களுக்கும், செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுயுடையோருக்கான கைப்பேசி தலா ரூ.13500 வீதம் 5 நபர்களுக்கும் ஆக மொத்தம் 10 நபர்களுக்கு ரூ.1,40,000 - மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் திருவாரூர் அரசு இசைப்பள்ளியில் நடைபெற்ற இளையோர் கலைப்போட்டிகளில், வெற்றிப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தையல் நாயகி, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, மாவட்ட வழங்கல் அலுவலர்தமிழ்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்புவனா, திருவாரூர் மாவட்ட அரசு பள்ளிதலைமையாசிரியர்ஆனந்தி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.