கலெக்டர் ஆபீசில் இரவு போராட்டம் நடத்தும் வருவாய்த்துறையினர்!
ஜி.கே.சேகரன்,
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் - ஆட்சியர் அலுவலகத்திலேயே சமைத்து இரவு பகலாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வேலூர்மாவட்டம், வேலூர், காட்பாடி, கேவிகுப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அனைக்கட்டு உள்ளிட்ட 6 தாலுக்காக்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 4ஆம் கட்டமாக வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜோஷி, ரமேஷ, தீனதயாளன், சேகர் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் அங்கேயே உணவு சமைத்து உண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் துணை வட்டாச்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும், மேலும் இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை விதித்திருந்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும்.
இளநிலை உதவியாளர்கள் தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்து மனித வள மேலாண்மைதுறை மூலம் தெளிவுறை வழங்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாச்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைக்கு என சிறப்பு பணிகள் மற்றும் கலைக்கப்பட்ட 97 பணிகளை மீண்டும் வழங்க வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகள் வழங்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்று மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனே வழங்கிட வேண்டும். உங்கள் ஊரில் உங்களை தேடி மக்களுடன் முதல் மக்களின் முகவரி போன்ற அரசு திட்டபணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கபடுவதை தவிர்த்து திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இரவு பகலாக தங்கி காத்திருக்கும் போராட்டத்தில் திரளான வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்
முதல் கட்டமாக வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டமும் பணிகளை புறக்கணித்து போராட்டம் வேலை நிறுத்த போராட்டமும் செய்தனர் 4 ஆம் கட்டமாக நேற்று இரவு பகலாக ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை துவங்கினர்.