நடுநிலையுடன் செயல்படாத மாவட்ட தேர்தல் அலுவலர்! நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை! பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பேட்டி!

 நடுநிலையுடன் செயல்படாத மாவட்ட தேர்தல் அலுவலர்! நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை! பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பேட்டி!

ஜி.கே.சேகரன்,

 அரக்கோணம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி சரியாக கடைபிடிக்கவில்லை எனவே வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பாளரை நியமிக்க தேர்தல் ஆணையரிடம் பாமக மனு அளிக்கும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பேட்டி..தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென கலந்தாய்வு கூட்டம்.

 இராணிப்பேட்டைமாவட்டம், இராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிகையில் கலந்துகொள்ளும் முகவர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

  மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இதில் அரக்கோணம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் பாலு, அமமுக பார்த்திபன், பாமகவை சேர்ந்த நிர்வாகிகள் சக்கரவர்த்தி,கிருஷ்ணன்,ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சரவணன், இளவழகன், ஜானகிராமன்,உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகளும் முகவர்களும் கலந்துகொண்டனர்

 முன்னதாக அரக்கோணம் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளா வழக்கறிஞர்¢ பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், இராணிப்பேட்டை தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

  வாக்கிற்கு பணம் அளித்த திமுக தேர்தல் விதியை மீறி வாக்கு சாவடியில் செயல்பட்டது.  பல புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அளித்தோம். மாநில தேர்தல் ஆணையரிடமும் புகார் அளித்தோம்.

 ஆனால் மாவட்ட தேர்தல் அலுவலர் நடுநிலையுடன் செயல்படாமல், திமுகவுக்கு சாதகமாக செயல்பட்டார். புகார் அளித்த பாமகவினர் மீதே வழக்கு போட்டு கைது செய்து  சிறைக்கு அனுப்பினார்கள்.

  எனவே வாக்கு எண்ணிக்கையில் பாமகவுக்கும் திமுகவுக்கும் கொஞ்சம் வித்தியாசம் தான் வரும் என்பதால் அரக்கோணம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென அதிகாரிகள் முழுமையாக செயல்படுகின்றனர்.¢

  எனவே வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறாது என்ற காரணத்தில் மாநில தேர்தல் ஆணையத்திடம் பாமக சார்பில் இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு கண்காணிப்பாளரை நியமிக்க மனு அளிக்கவுள்ளோம்.

  வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடுநிலையுடன் செயல்படாத மாவட்ட தேர்தல் அலுவலர் நீதிமன்றத்தின் மூலம் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

  மேலும் இந்த தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சணையான குரோமிய கழிவுகளை அகற்ற கோரிக்கை வைத்தனர். அது நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

 எனவே உடனடியாக அந்த கழிவுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து அரக்கோணம் தொகுதியில் மக்கள் பிரச்சணைக்காக நான் குரல் கொடுப்பேன் என கூறினார்.