1 ரூபாய் நாற்றங்கால் 10 ரூபாய்க்கு உயர்த்திய ஆட்சியர்!

ஆர்.ரமேஷ்,
1 ரூபாய்க்கு நாற்றங்கால் விற்பதால் ஊராட்சிக்கு நஷ்டம் ஏற்படுகிறாது என்று ஆட்சியரிடம் முறையிட்டதால், அவர் ஒரு நாற்றங்காலை 10 ரூபாய் என விலை உயர்த்தினார்.
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டம் சின்னாரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 6 கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது சின்னாரம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் நேரடியாக சந்தித்து, தங்கள் பகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்பகுதி மக்கள் மயான வழித்தடம் வேண்டும் என்றும் மேலும், இவ்வூராட்சியில் உள்ள 5 கிராமங்களிலும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கிராமமான காராகான் கோட்டை பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடி தண்ணீர் வருவதில்லை. இத்திட்டத்தின் பயன்பாடு எங்கள் கிராமத்திற்கும் வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பராமரிக்கும் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் எத்தனை நாட்களாக வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா, இவ்வு+தியம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.
மேலும், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் வரைபடத்தின் வாயிலாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளவாறு எத்தனை சாலைகள் உள்ளன, எத்தனை நீர்நிலைகள் உள்ளன, அரசுக் கட்டிடங்கள் எங்கெங்கு உள்ளன, நீர்த்தேக்க தொட்டி எத்தனை உள்ளது என்ற விவரங்கள் கூடிய வரைபடத்தினை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக இதே போன்று அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள தகவல்களை விரிவாக வரைபடங்கள் மூலம் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் வைக்கப்படும் என்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற பழைய கட்டிடம் பயன்பாடில்லாமல் இருப்பதை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இக்கட்டிடத்தை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிட உத்தரவிட்டார்.
தொடர்ந்து சின்னாரம்பட்டி கிராம பகுதியில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்ட பொழுது சில வீடுகளில் பழைய பொருட்கள், உரல்கள் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி டெங்கு உருவாக்கும் லார்வா புழுக்கள் இருப்பதை கண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக சுகாதாரப் பணியாளர்கள் மூலம் இதனை அப்புறப்படுத்தி இப்பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், நாயக்கனூர் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக இக்கட்டிடத்தில் தற்போது நூலகம் அமைக்கப்பட்டுள்ளது, இந்த நூலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, இந்த நூலகத்திற்கு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள் எத்தனை பொதுமக்கள் வருகிறார்கள் என்று விசாரித்தார்.
இக்கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் மாற்றப்பட வேண்டும், இக்கட்டிடத்தை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து,அப்பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் ஆய்வுக் மேற்கொண்ட பொழுது பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அரிசி மற்றும் பருப்பு வகைகள் மிகவும் தரமான முறையில் இருப்பதைக் கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இதேபோன்று வழங்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அப்பகுதியில் உள்ள அரசு நிலங்களில் நாற்றங்கால் வளர்ப்பு (நர்சரியின்) வாயிலாக விதைகள் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு, இந்த நாற்றங்கால் செடிகள் எப்படி விற்பனை மேற்கொள்கிறீர்கள் என்று கேட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சாலை பகுதிகளிலும், காலியாக உள்ள அரசு நிலப்பகுதிகளிலும் நடவு பணிகளை மேற்கொள்ள வழங்கப்படுகிறது. இக்கன்றுகளின் 1-ன் விலை மூன்று ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இவ் ஊராட்சிக்கு வருவாய் வருகிறதா என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டதின்பால், நஷ்டத்தில் தான் செயல்படுகிறது என்று தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒரு கன்று ரூ.10/ என விற்பனை மேற்கொண்டு வருவாயை பெருக்கிக்கொள்ளவும் மேலும், தொடர்ச்சியாக இந்நாற்றங்கால் பணிகளை செயல்படுத்தவும் உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்தார்.
அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்று அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.
நீர் ஏற்றும் பணியாளர்களிடம் இது குறித்த ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, அவர் ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று முறை தூய்மை பணியில் மேற்கொள்வதாக தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்து, மேலும் நீரேற்றும் பணியாளர் நான் தொலைபேசியின் வாயிலாக செயலியினை பயன்படுத்தி நீரேற்றும் பணியினை மேற்கொண்டு வருகிறேன்.
நீர் இல்லாத நிலையினையும் இதில் அறிந்து கொள்ளலாம். அவ்வப்போது நீர் இல்லாத நேரத்தில் தொலைபேசியின் வாயிலாக நான் இருக்கும் பகுதியில் இருந்தே இயக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன்.
அதேபோன்று நீர் நிரம்பிய உடன் அதற்கான தகவல் தொலைபேசியின் வாயிலாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நீர் நிரம்பியதற்கான தகவல் தெரிந்தவுடன் உடனடியாக தொலைபேசியிலேயே இணைப்பை துண்டிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன். இதன் வாயிலாக மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் இயக்கி கொண்டிருக்கிறேன். இந்த நிலைபாட்டை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இதே போன்று மாவட்டத்தில் உள்ள மற்ற பணியாளர்களும் இந்த செயலியை உபயோகப்படுத்தி பொதுமக்களுக்கான தண்ணீர் வழங்கும் குறைபாட்டினை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சின்னாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் உள்ள மாணவர்களிடம் அமர்ந்து கல்வி கற்றல்; திறன் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டு, இப்பள்ளி வளாகம் தாழ்வாக உள்ளதை கண்டு, மழைக்காலங்களில் நீர் தேங்கும் என அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக இப்பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிடடார்.
தொடர்ந்து, மாவட்ட அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சிகளில் அரசு அறிவுறுத்தியுள்ளவாறு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையினை கேட்டறிந்த தகவல்களை மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆய்வில் மேற்கொண்ட தகவல்கள் மாவட்ட அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
இதனை அறிக்கையாக வழங்கிட வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டு, தொடர்ந்து மாலை 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரங்கத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் வேண்டி மனுக்கள் வழங்கினார்கள். இதை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அக்கிராம மக்களிடம் இன்று உங்கள் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டபோது, பிரதான கோரிக்கையாக மயான சாலை வேண்டியும், பகுதி நேர நியாய விலை கடை வேண்டியும் மற்றும் கிருஷ்ணாபுரம் கிராம சாலைகள் வேண்டியும், நான் ஆய்வின்போது கண்டறியப்பட்டது என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இம்முகாமில் கோரிக்கை மனு வழங்க வருகை புரிந்த மாற்றுத்திறனாளி நேரடியாக அவர்களை சந்தித்து, உடனடியாக அவர்களுக்கான கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் நடக்க முடியாத படுத்த நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி நபர் இதனால் வரை மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகைக்கும், அதற்கான அடையாள அட்டை பெறுவதற்கும் விண்ணப்பிக்கவே இல்லை.
இதை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக ஆதார் அடையாள அட்டை பதிவிடும் பணி மேற்கொள்ளவும், மருத்துவச்சான்று பெறவும், அந்நபருக்காக வாகன ஏற்பாட்டினை மேற்கொண்டு, மேலும் உடன் அரசு அலுவலர் ஒருவரை நியமித்து உடனடியாக இப்பணிகள் மேற்கொண்டு இத்தகவலினை எனக்கு தெரியப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாக அவசர நிலையின்பால் தொடர்ந்து, இத்திட்ட முகாமில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்து, தொடர்ந்து அனைத்து மாவட்ட அலுவலர்களும் அவரவர் பணிகளை தொடர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஸ்ரேயா குப்தா, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.