போலீஸ் கண் எதிரிலேயே கொலையாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய வாலிபர்கள்! எஸ் பி தலைமையில்நேரடி பாதுகாப்பு

நூ. அ.பிலால்,
திருவிழாவில் மேளம் அடிப்பது தொடர்பாக இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நேற்று அப்பு என்கின்ற வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொலையாளிகளின் வீட்டை எதிர் கோஷ்டியினர் அடித்து நொறுக்கினர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் இச்சம்பவம் நடந்திருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்நிலையில் மாவட்ட எஸ்பி ஸ்ரேயா குப்தா அவர்கள் நேரில் வந்து பாதுகாப்பை பலப்படுத்தினார்.
இது பற்றின விவரம் வருமாறு,
திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடியில் கோயில் திருவிழாவின் போது இளைஞர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் அப்பு என்ற சந்துரு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
திருவிழாவில் மேளம் அடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
அப்படி இருக்க பாதிக்கப்பட்ட உறவினர் மற்றும் பகுதி மக்கள் கோணாமேடு பகுதியில் புகுந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், டாட்டா ஏசி வாகனம், ஆட்டோக்கள் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து சேதப் படுத்தினர்.
சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜான் என்பவரை தனிப்படை காவல்துறையினர் சேலத்தில் கைது செய்தனர்.
மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஸ்ரீதர், கார்த்திக் ஆகியோரை நகர போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான் மற்றும் கார்த்திக் ஆகியோர் வீட்டை கொலையான சந்துருவின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.
வீடுகளின் முன்பு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தும் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா நேரில் ஆய்வு நடத்தி போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினார்.