சூதாட்ட விடுதி நடத்தியவர் படுகொலை! கள்ளக்காதலியின் மகளை அனுபவிக்க முயன்றதால் விபரீதம்!

வி.டி.வித்யாசாகர்,
கள்ளக்காதலியின் மகளையும் அனுபவிக்க திட்டமிட்ட சூதாட்ட விடுதி உரிமையாளரை, ஆசை வார்த்தை குறி அழைத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் சினிமா காட்சிகளைப்போல் நடந்துள்ளது.
கர்னூல் மாவட்டம் சிங்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் புட்டா ராமு. பாஜக பிரமுகரான இவர் ஐதராபாத்தில் சூதாட்ட விடுதி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றை நடத்தி வந்தார். வெளியுலகுக்கு நல்லவராக காட்டிக்கொள்ள அப்துல்கலாம் அறக்கட்டளை என்ற பெயரில் சமூகசேவை செய்து வந்தார்.
அப்படியிருக்க நடைபெற உள்ள எம்பி தேர்தலில் போட்டியிட பாஜ கட்சி தலைமையிடம் மனு அளித்திருந்தார். இவர் கடந்த 7ம் தேதி ஐதராபாத் நிஜாம்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுலபாலம் பகுதியை சேர்ந்த பெண் ஹிமாம்பி மற்றும் அவரது மகள் நசீமா ஆகியோர், ரவுடி கும்பலுடன் சேர்ந்து புட்டா ராமுவை கொடூரமாக கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஹிமாம்பி, நசீமா, மணிகண்டா, வினோத், முகமதுகைசர், பண்டாசிவா, கபாலா நிகில் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.
அதில், கணவரை பிரிந்த ஹிமாம்பி தனது மகள் நசீமாவுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் யூசுப்குடாவில் உள்ள ஒரு போலீஸ்காரரின் வீட்டில் வாடகைக்கு குடியேறினார். சில நாட்களுக்கு பிறகு ஹிமாம்பிக்கும் போலீஸ்காரருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹிமாம்பி வாடகைக்கு குடியிருந்த வீட்டை அவரது பெயருக்கே போலீஸ்காரர் பத்திரப்பதிவு செய்து கொடுத்துவிட்டாராம்.
பின்னர் பாஜக பிரமுகர் ராமுவுடன் ஹிமாம்பிக்கு பழக்கம் ஏற்பட்டது.ராமு ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, சூதாட்டமும் நடத்தியுள்ளார். இந்நிலையில் ஹிமாம்பியின் மகள் நசீமாவை அடைய ராமு திட்டமிட்டுள்ளார். இதற்கு ஹிமாம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத ராமு, நசீமாவை அடைய பலமுறை முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹிமாம்பி, ராமுவை கொல்ல முடிவு செய்தார்.
அப்போது ராமுவின் சூதாட்ட நண்பர்களான மணிகண்டா, வினோத் ஆகியோர் ஹிமாம்பிக்கு அறிமுகமாகினர். இதற்கிடையில் நசீமாவுடன் வினோத்துக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் ராமுவை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 7ம்தேதி நசீமா போன் செய்து ராமுவை அழைத்துள்ளார். விரைந்து வந்த ராமுவை ஹிமாம்பி, மணிகண்டா, வினோத் மற்றும் ஜிலானி உள்பட 11 பேர் ராமுவை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த கொலையில் வேறு எவருக்கும் தொடர்பு உள்ளதா என போலிசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.