நூறு நாள் பணியாளர்களுக்கு பட்டை போட்ட ஊராட்சி!

நூறு நாள் பணியாளர்களுக்கு பட்டை போட்ட ஊராட்சி!

கு.அசோக்,

100 நாள் பணி இல்லை என கூறியதால் மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்குப்பம் பகுதியில் 100 நாள் பணிக்காக பைரவாகாலணி  பகுதியை சேர்ந்த  35 க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நேற்று பதிவு செய்யப்பட்டது.

  அதன் பேரில் இன்று பணிக்காக சென்றபோது உங்களுக்கு வேலை இல்லை  என ஊராட்சி நிர்வாகம் திருப்பி அனுப்பியது.

   இதனை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 100 நாள் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் பணியை எங்களுக்கு முறையாக வழங்குவதில்லை ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வேலை வழங்க மறுக்கின்றனர்.

  இதனை மாவட்ட நிர்வாகம்  ஊராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.