மழை பாதிப்பை இவர்களிடம் தெரிவிக்கனும்!

மழை பாதிப்பை இவர்களிடம் தெரிவிக்கனும்!

ஜி.கே.சேகரன்,

 எதிர்வருகின்ற வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூரில் குடிசைகளிலும் வெள்ளம் வரக்கூடிய வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாரும் மிக கன மழை பொழியும் நேரங்களில் அருகில் உள்ள பள்ளிக் கட்டிடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    

 அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் முதலான அத்தியாவசியப் பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளது.

 ஏரிகள் குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் சில இடங்கள் ஆழமானதாக உள்ளதால் நீச்சல் தெரியாதவர்கள் அவ்விடங்களில் குளிப்பதற்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 மழை மற்றும் இடி மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியே வராமலும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24ஙீ7 அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் "1077", "04179 - 229008" மற்றும் "04179 - 222111" ஆகிய எண்களில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.

 அதே போல் வேலூர் மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன், தலையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் ஆட்சியர் வே.இரா சுப்புலெட்சுமி, மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்தீரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

  பின்னர் மாவட்டம் முழுவதும் மீடு அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டது.

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 x 7 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையும் செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மழை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 தொலைப்பேசி எண் : 0416-2258016

 கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 1077

 வாட்ஸ்ஆப் எண் : 93840 56214

(Mobile App) : TN-Alert

வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை :

9384056214

  மேலும் வட்ட அளவில் கீழ்க்கண்ட எண்களில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

வட்டாட்சியர். வேலூர்

9445000508

 வட்டாட்சியர், அணைக்கட்டு

9994615821

 வட்டாட்சியர், காட்பாடி

9445000510

 வட்டாட்சியர், கீ.வ.குப்பம்

9894333876

 வட்டாட்சியர், குடியாத்தம்

9445000509

 வட்டாட்சியர், பேர்ணாம்பட்டு

9894751980

 

எனவே பொதுமக்கள் மழை நேரங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.

சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.