ரெயில் பெட்டியில் திடீர் தீ! 9 பேர் பலி!

K.A.Jegadeshwari,
மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலி 9 பேர் பலியானார்கள்.
உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்த நிலையில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அப்படியிருக்க ரெயில் பெட்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, ரெயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் ரயிலில் இருந்து வெளியேறி உயிர்தப்பினர்.
இருந்த போதும் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு தீ விபத்து, அதன் தொடர்ச்சியாக எழுந்த புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உயிரிழந்த 9 பேரும் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் என கூறப்படுகிறது. வருவாய் துறையினர் சம்பவ பகுதிக்கு வந்து விசாரணை நடத்தியதில், ரெயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என்தெரிய வந்துள்ளது.