அக்கா...தம்பி,..,தமிழிசை அண்ணாமலை சந்திப்பு!

அக்கா...தம்பி,..,தமிழிசை அண்ணாமலை சந்திப்பு!

ம.பா.கெஜராஜ்,

 கடந்த 12 ஆம் தேதி பிற்கபலில் இருந்து தேசிய அளவிலான செய்திகளில் இடம் பிடித்தார் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா பொது வெளி மேடையில் தமிழிசையை மிரட்டும் உடல் மொழில் பேசியதால் இப்படி செய்தியில் இடம் பிடித்தார்.     இந்த சம்பவத்தை, தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் எக்கு தப்பாக மீம்ஸ்களை போட்டனர். யுடியூப் விமர்சகர்களும் தமிழிசைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தனர்.

  இந்நிலையில் தமிழக பாஜகவில் ஏதோ ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்று பலரும் வாயை பிளந்துக் கொண்டு காத்திருந்தனர்.

  ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தமிழிசையை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார்.

 பின்னர் இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ''இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசையை அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

  தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது'' என்று பதிவிட்டார்.

 அண்ணாமலை பதிவை டேக் செய்து ''தமிழக பாஜக மாநிலத் தலைவர் அன்புத் தம்பி அண்ணாமலையைச் சந்தித்ததில் மகிழ்ச்சி....'' என்று தமிழிசை பதிவிட்டிருந்தார். முன்னதாக, தன்னை சந்திக்க வந்த அண்ணாமலைக்கு தான் எழுதிய ‘VOICE FOR ALL' தமிழிசை.

 கடந்த இரண்டு நாட்கள் பேசுப்பொருளாக இருந்து வந்த பிரச்சனைக்கு இருவரது சந்திப்புமானது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.