மக்களை காக்க வேண்டிய போலீசை கைது செய்யும் நிலை! நீதிபதி வேதனை!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
மக்களை காக்க வேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிப்பதாக ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி வலசையைச் சேர்ந்தவர் சத்தியஷீலா. இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் மற்றும் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டராக இருந்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா தகராறில் ராமர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட ராமர் குடும்பத்தினருக்கும் ராமசாமி குடும்பத்தினர் என்பவர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சனை கோவில் திருவிழா சமயத்தில் மோதலை ஏற்படுத்தியது.
அப்போதுதான் ராமர் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து ராமரின் மனைவி அன்னலட்சுமி போலீசில் புகார் அளித்ததன் பேரில் ராமசாமி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மற்றும் ஒரு முக்கிய குற்றவாளி ஆன ராம்குமாரை கைது செய்ய முயன்ற போது அவர் தப்பி ஓடி விட்டார்.
இதில் அவரது செல் எண்ணெய் வைத்து போலீசார் ட்ராக் செய்து பார்த்தபோது அவர் பெங்களூருவில் தங்கி இருப்பது தெரிய வந்தது.
போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த ராம்குமார் அங்கிருந்து கோவாவுக்கு தப்பி செல்ல முயன்ற போது போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டார்.
அவருடன் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணும் இருந்தார்.
அவர்தான் ராமநாதபுரம் அகதிகள் முகாம் வாழ் பிரிவு இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா.
அது சேர்ந்த போலீசார் இருவரையும் கைது செய்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திசிறையில் அடைத்தனர்.
ராம்குமாருக்கும் சத்திய ஷீலாவுக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்புவாரத்தால் ராம்குமாருக்கும் சத்திய ஷீலாவுக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் அதை வைத்து ராம்குமார் பல கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக புகார்கள் இருந்தன.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலாவும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் பணிக்கு திரும்பிய நிலையில் இந்த வழக்கில் சிக்கினார்.
மேலும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவை கைது செய்யப்பட்டு இருப்பதால் மீண்டும்அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சத்திய ஷீலா கொலை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ''மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது'' என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பி.புகழேந்தி, ''மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மக்களை காக்கவேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
எனவே, அந்த வழக்குகள் சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியும்'' எனக் கூறி, விசாரணையை ஜூன் 18 க்கு தள்ளி வைத்தார் நீதிபதி.