சசிகலாவும் ஓ.பி.எஸ்ஸிம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட விரும்பினால் அதிமுவில் சேர்த்துக் கொள்ளப்படுவர்! முன்னாள் அமைச்சர் வீரமணி பேட்டி!
ஜே.தே.பிரகாஷ்,
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கட்சியை விட்டு வெளியில் சென்றவர்கள் தெரிவித்தால் அதனை அதிமுக பரிசீலனை செய்யும் என்று முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளருமான கே.சி வீரமணி பேட்டி.
வேலூர் மாவட்டம் அனைக்கட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே சி வீரமணி தெரிவிக்கையில்,புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேலூர் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காரணம், அவர் அதிமுக தொண்டர்களை துரோகி என்று கூறியதால் தான். அவர் தோல்வி அடைவதற்கு இதுவே காரணமாக அமைந்துள்ளது.
வேலூர் தொகுதியில் ஏசி சண்முகத்திற்கு அனுதாபம் இருந்தது ஆனால் அவரின் போக்கு சரியாக இல்லை.
அதனால் தான் மக்கள் வாக்களிக்கவில்லை. அதிமுகவுடன் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை பொருத்தவரை மக்கள் மத்தியில் பிஜேபி ஆட்சி வரவேண்டுமா காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்பதைத்தான் பார்த்தார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மதியில் பிஜேபி ஆட்சி மக்கள் விரும்பவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டது அண்ணாமலை பாதயாத்திரை சென்றது. இவை எல்லாம் பார்க்கும் பொழுது மத ரீதியாக பார்க்கப்பட்டது. அதனால் தமிழகத்தில் ஓரளவு கூடுதல் வாக்கு பாஜக பெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவிற்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது .
அதை வைத்து தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தமிழகத்தில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்
இந்த தேர்தலில் யார் பிரதம மந்திரி என்று நாங்கள் முன் நிறுத்தவில்லை.
அதனால்தான் மக்கள் அதிக அளவில் அதிமுகவிற்கு வாக்கு அளிக்கவில்லை.ஆனாலும் மக்கள் அதிமுகவை வெறுக்கவில்லை.
தமிழகத்தில் திமுகவிற்கு எதிராக தான் மக்கள் பாஜகவிற்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
அதன் காரணமாக தான் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
ஜெயலலிதா இறந்த பிறகு,மத்தியில் இருந்த பாஜக அரசை ஆதரித்து போக வேண்டிய சூழ்நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டது.
அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.குறிப்பாக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது ,11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது.
அதன் காரணமாகத்தான் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மத்திய அரசு உடன் அனுசரித்து போனதால் தமிழகத்தில் பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணித்ததற்கு காரணம்,ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர்
பொதுமக்களை பேருந்துகளில் சுற்றுலா என்று அழைத்துச் சென்று மனமாற்றம் அடையச் செய்தனர்.
இது போன்ற செயல்கள் நடக்கும் என்பதை அறிந்து தான் எடப்பாடி பழனிச்சாமி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று அறிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுக்கவில்லை.நிர்வாகிகளுடன் ஆலோசனை கலந்து பிறகு தான் இந்த முடிவை எடுத்தார்.
திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் பல செய்தி தொலைக்காட்சிகளில் நடுநிலையான செய்திகள் வருவதில்லை.திமுகவிற்கு ஆதரவாக செய்திகள் வருகிறது.
அதிமுகவின் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்று கோரிக்கையை எழுந்துள்ளதேஎன்ன செய்தியாளர்கள் கேட்டதற்கு.
அதிமுகவில் ஒரு சிலரை தவிர அனைத்து தொண்டர்களும் கட்சியில் ஒன்றாக தான் ஒற்றுமையாக உள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எந்த ஒரு பிளவும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தொண்டர்களின் கருத்து.அதன் காரணமாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம்.
ஒற்றைத் தலைமையை விரும்பி தான் தொண்டர்கள் உள்ளனர்.நீதிமன்றம் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வழங்கியது.மக்களும் அப்படித்தான் உள்ளனர்.
சிலர் கட்சியை விட்டு வெளியே சென்றார்கள்.வெளியே சென்றவர்கள் தான் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இரட்டை இலை சின்னம் கிடைக்கக் கூடாது ஒரு சிலர் செயல்பட்டனர்.
கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் திமுகவுக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் தான் செயல்பட்டு வருகிறார்கள்.வெளியே சென்ற யாரும் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படவில்லை.
அதிமுகவிற்கு எதிராக பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோல்வி அடைந்த பிறகு ஒன்றாக சேரலாம் என்று தற்போது கூறுகிறார்கள்.
வெளியே சென்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று எப்போது கூப்பிட்டாலும் நாங்கள் வருவதற்கு தயாராக இருக்கிறோம் ஆதரவு தருகிறோம் என்று சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தால் அதனை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பரிசீலனை செய்யும்.
அதிமுக கட்சி நன்றாக வளர வேண்டும் என்றால் இதுபோன்று அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
கட்சியை ஒன்றாக சேர வேண்டும் என்று அறிக்கை விடுபவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று ஒன்றாக செயல்படுவோம் என்று அறிவித்தால் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்.
இவ்வாறு கே.சி.வீரமணி கூறினார்.