பீர் மற்றும் குவாட்டருக்கு பத்து ரூபாய் கேட்ட சேல்ஸ் மேன் ! தர மறுத்து மது பிரியர் வாக்குவாதம்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் கடை எண் இல்லாமல் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அதில் சுரேஷ் என்பவர் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த மதுபான கடைக்கு மது வாங்க வந்த நபர் ஒருவர் மது பாட்டிலை வாங்கி உள்ளார் அப்போது பீருக்கு ஐந்து ரூபாய் அதிகமாக எடுத்து இருந்தார் இதன் காரணமாக அந்த நபருக்கும் சுரேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் ஐந்து ரூபாய் கூலிங் இருப்பதால் எக்ஸ்ட்ரா எடுக்கிறேன். முடிந்தால் வாங்கிக்கோ இல்லன்னா கிளம்பு என சேல்ஸ்மேன் குமார் அடாவடியாக கூறினார்.
இதனால் அந்த நபர் எதற்காக ஐந்து ரூபாய் எக்ஸ்ட்ரா எடுக்குறீங்க கவர்மெண்ட் சம்பளம் தானே வாங்குறீங்க இந்த பணம் எல்லாம் எங்கே செல்கிறது என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த அந்த சேல்ஸ்மேன் அந்த 5ரூபாய் பணத்தை அவரிடமே திருப்பக் கொடுத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை அறிந்து கொண்ட சேல்ஸ்மேன் பின்னால் மது வாங்க வரும் நபர்களிடம் பணத்தைப் அதிகமாக எடுக்காமல் எம்ஆர்பி ரேட்டுக்கு மதுவை கொடுத்தார்.
அப்போது முன்பு வாங்கப்பட்ட அனைத்து மது பாட்டில்களுக்கும் எக்ஸ்ட்ராதான எடுத்த இப்ப எடுக்க வேண்டியதுதானேஏன் வீடியோ எடுக்கறது தெரிஞ்சு நீ பணம் எடுக்க மாட்டேங்கறியா என்று முதியவரும் சாரா மாறியாக கேள்வியை எழுப்பினார்.
இந்நிலையில், சேல்ஸ்மேன் சுரேஷ் என்பவர் கடைக்கு வரும் போது பிரியர்களை ஆபாசமாக திட்டுவதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது மேலும் இது போல் குவாட்டருக்கு அதிகமாக பண வசூல் செய்யும் சூப்பர்வைசர் மற்றும் சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது