சம்பளம் பத்தலைன்னா ஓடிவிடுங்கள்!

ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தில் உள்ள 12,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் அங்குள்ள ஒப்பந்த பணியாளர்களை முறைப்படுத்தி நிரந்தரம் செய்து வருகின்றனர்.
அந்தந்த மாநில முதல்வர்களைப் போலவே தமிழ்நாட்டிலும் பகுதிநேர ஆசிரியர்கள் போன்ற தற்காலிகமாக பணிபுரியும் அனைவரையும் முறைப்படுத்தி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய சிறப்பு பாடங்களை பகுதி நேரமாக மாணவர்களுக்கு கற்றுத் தருகின்ற 12ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்வதாக 181ஆவது வாக்குறுதியை திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்திருந்தார். 'உங்கள் தொகுதி ஸ்டாலின்' நிகழ்ச்சி நடந்த தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் நிரந்தரம் செய்வேன் என்றும் நேரில் சென்று ஸ்டாலின் வாக்குறுதியை கொடுத்திருந்தார்.
அதன் பின்னர் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு பட்ஜெட்டிலும் பணிநிரந்தரம் அறிவிக்கவில்லை என்பதால் 12327 பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை சம்பளத்தில் பணியமர்த்த ஆகும் செலவை அரசு சுமையாக நினைக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கின்றனர்.
மக்கள் பிரச்சனையை யார் தீர்ப்பதாம். சம்பளம் பத்தலைன்னா வேலையை விட்டுவிட்டு போங்கப்பா நீங்களும் உங்கள் பாடமும் என்கிறு மக்கள் சொல்கிறார்கள்.