பலத்த கோஷங்களுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்த ராகுல் காந்தி!

பலத்த கோஷங்களுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்த ராகுல் காந்தி!

ம.பா.கெஜராஜ்,

 சட்ட போராட்டத்தில் வெற்றிக் கொண்ட ராகுல் காந்தி பலத்த கோஷங்களுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவரை இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் உறசாகமாக வரவேற்று அழைத்துச்சென்றனர். 

 காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அறிவோம்.  அந்த உத்தரவுக்கு உசநீதிமன்றம் தடைவிதித்ததை தொடர்ந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. மேளும் அவர் வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுமார் சுமார் 12 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்தார்.

 கடந்த 136 நாட்களாக எம்.பி. என்கிற அந்தஸ்த்தை இழந்திருந்த ராகுல் காந்தி மீண்டும் எம்.பி., ஆனார். தகுதி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி நாடாளுமன்றம் வருவதாக காங்கிரஸ் சார்பில தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், முன்னதாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியதும், அவையில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்தார். நாடாளுமன்றம் காந்தி சிலை முன் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் காந்தி வாழ்க என முழக்கமிட்டு அழைத்து சென்றனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமின்றி இந்தியா அணியின் எம்பிக்கள் உற்சாகமாக ராகுலை நாடாளுமன்றத்துக்கு வரவேர்றனர். அதன்பின் ராகுல் காந்தி மக்களவையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 முன்னதாக காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவை சபாநாயகரை சந்தித்து ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியில் அமர்வார் என்கிற அறிவிப்பை கோர திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் மக்களவை செயலகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது நினைவுகூறத்தக்கதாகும்.