ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல்! அமலாக்கத்துறையில் இன்று எம்.பி.கதிர் ஆனந்த் ஆஜர்!

செய்திப்பிரிவு,
வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் அறக்கட்டளை சார்பில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் கிங்ஸ்டன் பொறியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கும் காட்பாடி காந்தி நகர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
அப்படியிருக்க பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் உள்ள நிர்வாக அலுவலகம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் கட்டிடத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து அமலாக்கத் துறை சார்பில் அதிகாரப்பூவமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இருந்த போதும் கதிர் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், விசாரணைக்காக இன்று (ஜன. 22) சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு எம்.பி. கதிர் ஆனந்த்துக்கு அமலாக்கத் துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதை ஏற்று அவர் இன்று சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.
அப்படீன்னா டெல்லி பயணம் எதுக்காம்?