முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து! ஆதீனமும் வாழ்த்தினார்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து! ஆதீனமும் வாழ்த்தினார்!!

 ம.பா.கெஜராஜ்,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71 வது பிறந்த தினம் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு

பிரதமர் மோடி,  அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

  மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தயொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று காலை மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன், சேகர்பாபு, ம.சுப்பிரமணி, நேரு மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

  இதையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் அப்போது மேயர் ப்ரியா உடனிருந்தார். அவர்களை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உடன் அழைத்துச்சென்று மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் கருணாதிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்று தாயார் தயாளம்மாவிடம் ஆசி பெற்றதும், அடுத்ததாக சிஐடி காலணியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு சென்று ஆசி பெற்றார். அடுத்ததாக பேராசிரியர் மறைந்த அன்பழகன் வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து கூறியிருக்கிறார். அதில் தமிக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு, உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகள் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவெவில் தெரிவித்துள்ளார்.

 அதே போல்  திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை மூலம் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியவை.

 கோயில் திருப்பணிகள், தீர்த்தக் குளங்களைச் சீரமைத்தல், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், உழவுத் தொழிலை மேம்படுத்துதல், உழவுத் தொழிலை நிலை நிறுத்த மானியங்கள் வழங்குதல், பசிப்பிணிபோக்கும் அன்னதானங்களை கோயில்களில் நிகழச் செய்தல்போன்ற நற்பணிகளுடன், அறநிலையத் துறை பதிப்பகத்தில் 2-ம் கட்டமாக 108அரிய ஆன்மிக நூல்களை வெளியிட்டு சமய உணர்வை வளர்த்தல்ஆகிய அறிவுப் பணியையும் ஆற்றிவருதல் சிறப்புக்குரியது.

  மார்ச் 1-ம் தேதி (இன்று) பிறந்த நாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமும், வளமும்தழைத்து, தமிழகம் மென்மேலும் சிறக்கும் வண்ணம் நீடூழி வாழவேண்டும் என நமது ஆன்மார்த்தமூர்த்திகளாகிய ?ஞானமா நடராஜப் பெருமான் திருவடிமலர்களை சிந்தித்து வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளார்.