அரசியல் செய்யும் அரசு மருத்துவர்! கைகொடுக்காத விவசாயம்.... விவசாயி தற்கொலை!!!

அரசியல் செய்யும் அரசு மருத்துவர்! கைகொடுக்காத விவசாயம்.... விவசாயி தற்கொலை!!!

 ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் துர்நாற்றம் வீசுகிறது... முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும்  நோயாளிகள் குற்றச்சாட்டு. 

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் சத்யா (30)  எனவருக்கு  கருக்கலைப்பு ஆனதால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரி இல்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைகு வந்துள்ளார்.

 அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள். ஒப்புக்கொண்ட சத்தியா கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.

 அங்கு அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

 மருத்துவமனையில் உள்ள வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்த கரையுடன் இருப்பதாகவும், கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகளும், அவருடன் உள்ளவர்களும் கடும் அவஸ்த்தைக்குள்ளாகிறார்கள்.

 ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 ஆனால் அங்கு ஒரு மருத்துவர், தமக்கு அரசியல் செய்வதற்கே அவருக்கு நேரம் போதவில்லை என்கிறாராம். அரசு சம்பளத்தை பெற்றுக்கொண்டு இப்படியா பொறுப்பில்லாமல் செயல்படுவது என்று மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். ஆனால் அதற்கு பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.

 கைகொடுக்காத விவசாயம்...விவசாயி தற்கொலை.

 புதூர் நாடு மலைப்பகுதியில் விவசாயம் கை கொடுக்காததால் மது பழக்கத்திற்கு அடிமையான விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில் இருக்கும் நடுக்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் காளி (60). விவசாயியான இவருக்கு லட்சுமி (48) என்பவருடன் திருமணமாகி நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் காளி தனக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல் சாமை மற்றும் காய்கறி உள்ளிட்ட பயிர் வகைகளை விவசாயம் செய்து வந்துள்ளார்.

  கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இவர் செய்த விவசாயத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விவசாயம் கை கொடுக்காததால் மனம் உடைந்த காளி தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியதால் மது பழக்கத்திற்கு அடிமையானார்.

 இதனால் இவருக்கும் இவரது மனைவி லட்சுமிக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 ஏற்கனவே விவசாயம் கை கொடுக்காததால் மனம் உடைந்த காளி,  தொடர்ந்து மனைவியுடனும் தகறாறு என்பதால் விரக்தியடைந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை  மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

 இதனை அறிந்த உறவினர்கள் உடனே அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விவசாயி காளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 விவசாயம் கைகொடுக்காததால் தற்கொலைக்கு செல்லும் விவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே போவது நாட்டுக்கு வெட்கக்கேடு.