இளைய தளபதி விஜயை பார்க்க வேண்டும் சார்! குணப்படுத்த முடியாத நோயால் என் மகன் அவதிபடுகிறான்! கண்ணீர் விட்டு அழும் ஏழைத் தாய்!

இளைய தளபதி விஜயை பார்க்க வேண்டும் சார்! குணப்படுத்த முடியாத நோயால் என் மகன் அவதிபடுகிறான்! கண்ணீர் விட்டு அழும் ஏழைத் தாய்!

கு.அசோக்,

 என் மகன் குணப்படுத்த முடியாத நோயால் அவதிபடுகிறார். அவன் விஜய் ரசிகன் சார்... அவன் தளபதி விஜயை பார்க்க வேண்டும் என்கிறான். தயவு செய்து என் மகனின் ஆசையை நிறைவேற்றுங்கள் என்று செய்தியாளர்களின் காலை பிடித்து கெஞ்சி அழுதார் ஒருதாய்.

 அம்மூர் அருகே பல ஆண்டுகளாக தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இரு கை மற்றும் கால்களும் செயலிழந்த நிலையில் அவதிப்பட்டு வருகிறார் ஒரும் இளைஞர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு பத்மா என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் உதயகுமார் வயது (20). இவர் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதிலிருந்து தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கை மற்றும் கால்களும் செயலிழந்து போனதால் நடக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்.

 இந்த நிலையில் உதயகுமாரின் பெற்றோர்கள் மகனின் குறைபாடு சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை.

  தசை சிதைவு நோய்க்கு இதுநாள் வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கைவிரித்து வருகிறார்கள். இருந்த போதும்ம் தொடர்ந்து இவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிப்பதற்கு பொருளாதார ரீதியாக வசதியும் இல்லை.

  இது குறித்து பேசிய உதயகுமாரின் தாய் பத்மா இந்த நோய்க்கு இதுநாள் வரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை பல்வேறு மருத்துவமனைகளில் கவுன்சிலிங் கொடுத்து எந்த ஒரு பயனும் இல்லை.

¢ மேலும் தமிழக அரசு இதுபோன்ற கொடிய நோயால் அவதிப்படும் பலருக்கு உதவிகரமாக மருந்துகளை கண்டுபிடித்து இது போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டும். 

எனது மகன் உதய குமார் இளைய தளபதி விஜயின் தீவிர ரசிகன். அவரை எப்படியாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார் சார். எனது மகனைப் பற்றின செய்தி ஊடகங்களில் செய்தியாக வெளிவரவேண்டும். இளைய தளபதி அதைப் பார்த்தால் போதும். விஜயிடம் நான் பேச வேண்டும் என்று மகனின் உடல் நிலையை பார்த்து கதறி அழுதுக்கொண்டே கோரிக்கை வைத்தார்.

 மேலும் தசை சிதைவு நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் எனது மகன் மட்டுமில்லாமல் இந்த நோயால் அவதிப்பட்டு வரும் பலருக்கும் தமிழக அரசு மருந்தை கண்டுபிடித்து நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றார்.