இன்று இரவு நாட்றம்பள்ளியில் செம வானவேடிக்கை! சித்ரா பொளர்ணமி நிகழ்வுகள்!

இன்று இரவு நாட்றம்பள்ளியில் செம வானவேடிக்கை! சித்ரா பொளர்ணமி நிகழ்வுகள்!

  ஜி.கே.சேகரன்,

 நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 113-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்றது, அப்போது பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள்!

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் சரஸ்வதி ஆற்றின் வடகரை எழுந்தருளி அருள் பாவித்து கொண்டிருக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 113 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி திருவிழா அதிவிமர்சையாக நடைபெற்றது.

அப்போது சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், ஆராதனை நடைபெற்றது. அம்மன் தேர் திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தனர். அதனை தொடர்ந்து ஆடு வெட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

   நாட்றம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஒரு டன் அரிசி அளவில் அன்னதனம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை நேரத்தில் சடலை மரத்துக்கு பூஜை செய்து சடலை மரம் சுற்றுதல் மற்றும் இரவில் வாண வேடிக்கையுடன் இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது.

சோளிங்கர்

 அதே போல், சோளிங்கர் ௐ சக்திகோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 1008 பால் குட ஊர்வலம் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

  இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கட்டாரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ௐசக்தி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் ,பாலபிஷோகம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு நறுமண திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்மாலை, பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

 அப்பொழுது மகா தீபாராதனைகள் நடைபெற்றது. பம்பை, உடுக்கை, மேலதாளங்கள் முழங்க 1008 பால் குட  ஊர்வலமானது  முனிஷ்வரன் கோவிலில் துவங்கி  கிருஷ்ணர் கோவில், கிராம தேவதை கோவில் மற்றும் ஊர் முக்கிய வீதிகள் வழியாக ௐசக்தி கோவிலில்  முடிவடைந்தது.

  பக்தர்கள் சுவாமிக்கு பாலபிஷோகம் செய்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வழிப்பட்டனர்.இதில் 20 கற்கும் மேற்ப்பட்ட கிராம பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.

 வள்ளிமலை,

 வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு முருகர் வள்ளி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனைகள் பக்தர்கள் வழிபாடு நடத்தப்பட்டது.

 வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு முருகருக்குவள்ளி தெய்வானைக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரங்களுக்கு பின்னர் மகாதீபாராதணையும் நடந்தது.

 சித்ரா பௌர்ணமி என்பதால் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

 அதே போல் இன்று இரவு வேலூர் நகரில் பூ பல்லகு திருவிழா விமர்சையாக நடைபெறவிருக்கிறது.