பிரியாணி பிளேட்டில் இராமர் படம்...இது நியாயமா?

பிரியாணி பிளேட்டில் இராமர் படம்...இது நியாயமா?

Nresh.N.

  பிரியாணி பிளேட்டில் இராமர் படம் இருந்ததைக் கண்டு சாப்பாட்டுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ராமரின் படம் இருக்கும் பேப்பர் தட்டில், பிரியாணி பரிமாறியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

 அதைப் பார்த்த மக்கள் மற்றும் பஜ்ரங்தல் உறுப்பினர்கள் ஆத்திரப்பட்டனர். உடனே சம்மந்தப்பட்டகடையை ரவுண்டு கட்டிவிட்டனர்.

 அப்போது அவர்கள் இராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், போலிசில் புகார் அளித்தனர்.

 அதன் பேரில் பிரியாணி கடைக்கு வந்த காவல்துறையினர் அதன் உரிமையாளரை கைது செய்தனர்.

  ஏற்கனவே இது போல் இஸ்லாமியர்களின் ஹதீஸ் புத்தகத்தில் பேப்பர் பிளேட் செய்து விற்பனை செய்த சம்பவத்தினால் சர்ச்சை எழுந்தது.

அபோது விசாரித்த போது ஹதீஸ் புத்தகத்தை யாரோ மொத்தமாக எடைக்கு போட்டிருக்கிறார்கள். அதில் பேப்பர் பிளேட் தயார் செய்து பயன்படுத்தியது தெரியவந்தது. ஆகவே தற்போது சர்ச்சையாகியிருக்கும் பிரியாணி பிளேட்டில் இராமர் படம் உள்ள பிரச்சனையும் அப்படித்தான் இருக்க்கக்கூடும் என்று போலிஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

  இருப்பினும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது போன்ற சென்ஷேஷனல் விவகாரங்களை கமுக்கமாக முடிப்பது தானே காவல் துறையின் வாடிக்கை.