தலைமுடியை கூட தொட முடியாது என்ற பெண் எம் பியை வீட்டுக்கு அனுப்ப போகும் நாடாளுமன்ற நெறிமுறை குழு!

தலைமுடியை கூட தொட முடியாது என்ற பெண் எம் பியை வீட்டுக்கு அனுப்ப போகும் நாடாளுமன்ற நெறிமுறை குழு!

ம.பா.கெஜராஜ்,

  தலைமுடியைகூட தொட முடியாது என்ற பெண் எம். பியை  நாடாளுமன்ற நெறிமுறை வீட்டுக்கு அனுப்ப போகிறது.

  பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம்பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு பரிந்துரை செய்துள்ளது.

 தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பல்வேறு பரிசுப் பொருட்களை மஹுவா பெற்றதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த மக்களவை நெறிமுறை குழுவுக்கு மக்களவை தலைவர் ௐ பிர்லா உத்தரவிட்டார். நெறிமுறை குழு முன்பு மஹுவா மொய்த்ரா கடந்த 2-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், நெறிமுறை குழு உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் 500 பக்க அறிக்கை வழங்கப்பட்டது. அதில், "நாடாளுமன்ற இணையதளத்தில், தனது சார்பில் கேள்விகளை கேட்க ஒரு வெளிநாட்டு தொழிலதிபரை (நண்பர்)அனுமதித்ததாக மொய்த்ரா ஒப்புக்கொண்டுள்ளார். இது நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவது மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது" என்றுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெறிமுறை குழுவின்ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யுமாறு மக்களவை தலைவருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வரைவு அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு 6 உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை அடிப்படையில், இந்த அறிக்கை ஏற்கப்பட்டது. மக்களவை தலைவர் ௐம். பிர்லாவிடம் இந்த அறிக்கைஇன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.