குழப்பம் தீர குலதெய்வம் கோவிலுக்கு சென்ற ஓ.பி.எஸ்.!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்.க்கு மாநில அரசியலில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, தேசிய அரசியலில் நுழைய திட்டமிட்டு, தேனி அல்லது தென்மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்காக பாஜக வை பிடித்துக் கொண்டிருக்கும் அவர் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், பாஜக வோ அதற்கான வழியை ஏற்படுத்தி தராமல் தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது.
தொடர் அரசியல் குழப்பங்களால், கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த கோவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வந்துள்ளார்.
பாவம் மனுஷன் நல்லது நடந்தால் சரி,