ஆற்காடு அருகே மர்ம மரணம்! கொலையா என்று போலீசார் விசாரணை!

கு.அசோக்,
உடல் நலம் சரியில்லை என்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றவர் கால்வாயில் சடலமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமம் காந்தி நகர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி. இவருடைய மகன் வெங்கடேசன் (43) கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 5 ஆண்களுக்கு முன்பு மகேஷ்வரியுடன் (35) திருமணமாகி வாழ்ந்து வந்துள்ளார்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று காலை கலவை மருத்துவமனைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்ற வெங்கடேசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
ஆகவே அவரது மனைவி உறவினர்கள் நேற்று மதியம் முதல் இரவு வரை அக்கம் பக்கம் தேடிப் பார்த்தனர்.
செல்போன் லொகேஷனை வைத்து கூட தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அகரம் பகுதியில் உள்ள திமிரி சாலையின் ஒரமாக உள்ள கால்வாயில் சடலம் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் கலவை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையிலான போலிசார் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆற்காடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக அவரது மனைவி மகேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த வெங்கடேசன் கால்வாயில் சடலமாக மீட்கபட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்மம் மரணம் குறித்துபோலீசார் விசாரித்து வருகின்றனர்.