கேரளா இளைஞர்களை தாக்கிய ஆம்பூர் போதை பார்ட்டிகள்!

கேரளா இளைஞர்களை தாக்கிய ஆம்பூர் போதை பார்ட்டிகள்!

 ஜி.கே.சேகரன்,
கேரளாவை சேர்ந்த இளைஞர்  ஆம்பூர் இளைஞர்கள் சிலர் தாக்கியதில் அவர்அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்,தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து ஆம்பூர் கிராமிய போலீசார் நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோலூர் நமாஸ்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் கேரளாவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் அவருடன் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் அருகில் உள்ள பெரியாங்குப்பம் பகுதிக்கு  உணவு  வாங்கி வர சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் குடிபோதையில் கேரள இளைஞர் சதீஷை  எந்த ஊர் நீ?  பணம் செல்போன் இருக்கிறதா என கேட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். 

இதனை அறிந்து முன்னாள் சென்று கொண்டிருந்த கேரள இளைஞர்கள் சிலர் அந்த இளைஞர்களை பதிலுக்கு தாக்கியுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கிராமத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து கேரளா இளைஞர்களை கடுமையாக தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள்.

 இதில் தலை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயமடைந்த சதீஷை உடன் பணிபுரியும் இளைஞர்கள் அழைத்துச் சென்று ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மேலும் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில்  ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்த குண்டாலு என்கின்ற சஞ்சய், மதியழகன், பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அஜய் மற்றும் சந்துரு, சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், ஆம்பூர் சாமியார் மடம் பகுதியை சேர்ந்த பாலசூரியா ஆகிய ஆறு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.